பாதை எல்லாம் முட்செடிகள்
சுற்றிலும் வெறுப்புகள்
உற்றார் எல்லாம் தள்ளினார்கள்
என் வாழ்க்கை முழுதும் கவலைகள்
தோன்றலும் , மறைவதும் ,
இவ்விரண்டும் தானோ
என் வாழ்வின் நோக்கமோ
தெரியாமல் அலைந்தேனே
இலக்கில்லாத கனவுகள்
விடை இல்லாத கேள்விகள்
சுமந்து இதோ வாழ்கிறேன்
என் தனிமையில் தேய்கிறேன்
விழி கானா விடியல்கள்
வழிகள் காணும் வீழ்ச்சிகள்
எண்ணம் எல்லாம் கானலே
என் தேகம் ஏங்கிடும் ஏக்கங்களே
நிறைவேறாத ஆசைகள்
சேர்த்து வைத்த பாவங்கள்
இருண்டு போன நெஞ்சம்
கொண்டு வந்து சேர்த்தது
இலக்கில்லாத கனவுகள்
விடை இல்லாத கேள்விகள்
சுமந்து இதோ வாழ்கிறேன்
என் தனிமையில் தேய்கிறேன்
தனிமையின் நெருக்கத்தில்
உம் வார்த்தையால் நீர் உறவானீர்
கண் கலங்கி நிற்கையில்
என் உணர்விற்கு நீர் பெலனானீர்
உம் மரணத்தாலுமே
பின் உயிர்த்தெழுந்த தாளுமே
அழகில்லா வாழ்க்கையை நீர்
அழகாய் மாற்றினீர்
உம் குறையா ஏவுகள்
விழிக்காணா வியப்புகள்
இயேசுவால் நான் வாழ்கிறேன்
என் தனிமையை மறக்கிறேன்
இயேசு என்னும் இணைப்பிலே
பிள்ளை என்னும் உறவிலே
அன்பு என்னும் உணர்விலே
உம்மோடு என்றும் வாழ்கிறேன்
இயேசு என்னும் இணைப்பிலே
பிள்ளை என்னும் உறவிலே
அன்பு என்னும் உணர்விலே
உம்மோடு என்றும் வாழுவேன்